Wednesday, July 22, 2009

சிங்ககாட் - புனே - ஒரு நாள் விசிட்

புனே வந்து என்னுடைய் முதல் ஊர் சுற்றல் "சிங்ககாட்", புனே நகரத்திலிருந்து சுமார் 30km தூரத்தில் உள்ள ஒரு மலை குன்று.

இந்த ட்ரிப் அடிக்கும் இரண்டு நாட்களுக்கு முன் எங்கள் நண்பர்கள் குழு தீர்மானித்த திட்டம் இந்த வார இறுதியில் (11-ஜூலை) எங்காவது ஊர் சுற்ற கிளம்புவது என்று. முடிவில் தீர்மானித்தது இந்த "சிங்ககாட்".

8 பேர், 4 பைக்குகளில் சனிக்கிழமை (11-ஜூலை-09) காலை 8 மணிக்கு நண்பர்கள் அலுவலகத்திலிருந்து (marvell இந்தியா) கிளம்புவதென்று திட்டம் தீட்டினோம் (மிஷன் சிங்ககாட்). மிஷனில் கலந்துகொண்ட குழு இதோ (பார்க்க படம் கீழே)




11-ஜூலை-09:
வேலை நாட்களிலேயே காலை 7 மணிக்கு எழுவதென்பது இயலாத நிலையில், மிக கஷ்டப்பட்டு 4 அலாரம் வைத்து ஒரு வழியாக எழுந்து கிளம்பி சொன்ன நேரத்திற்கு அலுவலத்தில் இருந்தோம். நண்பர் ஒருவர் வர தாமதமானதால் அங்கிருந்து கிளம்ப மணி 9 ஆனது.

காலையில் பெய்த மழையால் சற்று சிரமத்துடன் வண்டியில் கிளம்பினோம், Almost எல்லோரும் மழையில் நனைந்துகொண்டு...




போகும்போது சரியான வழி தெரியாததால் அங்கெங்கே வழி கேட்டு சென்றோம். காலையில் சாப்பிடாததால் வழியில் சோளம், கொய்யா எல்லாம் சாப்பிட்டு, மெதுவாக மழையில் வண்டியை ஒட்டி சென்றோம்.

போகிற வழியில் பார்த்த மிகவும் அருமையான, மிக பெரிய ஆறு, பெயர் தெரியவில்லை ஆனால் பார்ப்பதற்கு மிகவும் ரம்யமாக இருந்தது.




மலை பாதையில் ஏற ஆரம்பித்ததும் சற்றே ஊட்டியும், கொடைக்கனாலும் நினைவுபடுத்தியது இந்த பாதை.
Destination ஐ அடைந்ததும், வண்டியை park செய்துவிட்டு நடக்க ஆரம்பித்தோம். அந்த மலையின் ஆரம்ப வழி சிறியதாக இருந்தாலும், நடப்பதற்கு நன்றாக இருந்தது. நல்ல மழையில், நிறைய மக்களோடு மலை ஏற ஆரம்பித்தோம்.





இதுவரை எதற்கு இங்கு வந்தோம் என்று சொல்லவே இல்லை, அதாவது இந்த மலை உச்சியில், சிவாஜி (ரஜினி சிவாஜி அல்ல ) யின் தளபதி சமாதி இங்கு இருக்கிறது என்றும், சிவாஜி அரசராக இருந்த பொது இங்கே சண்டை practice செய்வாரென்றும் சொன்னார்கள். அதனால் இந்த சமாதியை பார்ப்பதற்கும், மலை உச்சியில் மிக பரந்த கார்டன் பார்க்க நன்றாக இருக்குமென்றும் இங்கே வந்தோம்.

மலை உச்சியை அடைந்ததும், எங்களை வரவேற்றது இனிய தென்றல் காற்று ஏறக்குறைய 100km வேகத்தில். மிக சில்லென்ற காற்று மிகவும் வேகத்தோடு முகத்தில் அடித்த காட்சியை விவரிக்க இயலாது, அனுபவித்தால் தான் தெரியும்.




ஏறக்குறைய 2 மணி நேரம் அந்த இனிமையான சுகத்தை அனுபவித்து, மலையின் ஒரு முனையை அடைந்து அந்த அழகான பள்ளத்தாக்கை பார்த்து ரசித்தோம்.





மிக அழகான பரந்த புல் வெளி, மரங்கள் அடர்ந்த அந்த இடத்தை பார்க்க ஒரு நாள் போதாது. அந்த இயற்கையின் அழகில் மயங்கி லயித்து அங்கிருந்த 4 மணி நேரமும் போனதே தெரியாமல் சுற்றிகொண்டிருந்தோம்.

இங்கே சொல்ல வேண்டிய ஒன்று, எல்லா இடத்திற்கும் போக அழகாக கருங்கல்லால் ஆனா பாதையை செய்து வைத்திருக்கிறார்கள். ஏறக்குறைய எல்லா இடமும் நன்றாக பராமரித்து இருக்கிறார்கள்.




இங்கே பார்பதற்கு, சிவாஜி தளபதியின் சமாதி (அருகே ஒரு பெரியவர் மராட்டி/ஹிந்தி யில் அவர்களது கதை சொல்கிறார்), அழகான பரந்த புல் வெளி, மலை உச்சியில் பள்ளத்தாக்கு view, பள்ளத்தாக்கிலிருந்து கிளம்பி வரும் ஆக்ரோஷமான காற்று (50kg விற்கு கீழே இருப்பவர்கள் மற்றவர்களை இறுக்கி பிடிக்க வேண்டும், இல்லையேல் பறந்தால் யாரும் பொறுப்பல்ல!), பள்ளத்தாக்கை ஒட்டிய பாதை - இவை தான் இங்கே, ஆனால் 100% இயற்கையை ரசிக்கலாம்.





அந்த இனிமையான் சில்லென்ற தூரலில் சூடான தேநீர்.





பள்ளத்தாக்கு விளிம்பில் போட்டோ session.... photograph பிரியர்களுக்கு ஏற்ற இடம்...


பச்சை பசேலென்ற புல்வெளியின் நடுவே நான்...





முடிவில், மாலை 4 மணிக்கு அங்கே இருந்து கிளம்ப மனம் இல்லாமல் கிளம்பினோம்.
மொத்தத்தில் அந்த ஒரு நாள் மிகவும் இனிமையாக, மன நிறைவுடன், நல்ல ஒரு விஷயத்திற்காக செலவழித்த சந்தோஷத்தோடு வீடு வந்து சேர்ந்தோம்.






மீண்டும் ஒரு முறை போக தீர்மானித்து இருக்கிறோம் சங்கத்தில்....


சரவணன். த





Tuesday, July 21, 2009

புனே - என் புதிய அலுவலக நகரம்

வேலைக்கு சேர்ந்த முதல் நாளே நான் ரசித்தது சில்லென்ற குளிர்ந்த காற்று, எல்லுருக்கும் ஏற்ற பருவ நிலை, அகலமான சாலை மற்றும் அழகிய பெண்கள்.

இனி, என் பார்வையில் புனே:
பருவ நிலை மிகவும் அழகாக (பெங்களூர் போல) அதே சமயம் எப்பொழுது மழை பெய்யும் எப்பொழுது வெய்யில் அடிக்கும் என்று கணிக்க முடியாத ஒரு பருவ நிலை. மொத்தத்தில் சென்னை லிருந்து வரும் எவருக்கும் பிடித்தமான ஒரு weather.

அடுத்தது சட்டென்று கண்ணில் தெரிவது, அழகான அகலமான சாலைகள். பராமரிக்க சற்று சிரம பட்டாலும் மொத்தத்தில் நன்றாகவே வைத்திருக்கிறார்கள். அழகாக அமைந்திருக்கும் பாதசாரிகள் நடை பாதை. சென்னையும் இதை follow செய்தால் நன்றாக இருக்கும்.





மிகவும் அழகான நகரத்தில் கண்டிப்பாக மேல்தட்டு மக்களை (மறுபடியும் பெங்களூர் போல்) அதிகமாக காண முடிகிறது. மேற்கத்திய நகரத்திற்கு நாங்களும் சளைத்தவர்கள் அல்ல என்பது போல எல்லோரும் நவீன உடையில் நகரம் முழுவதும் உலா வருகிறார்கள்.

அழகான மால்கள், திரை அரங்குகள், நவீன ரக கட்டிடங்கள், வியாபார நிறுவனங்கள் என ஒரு நவீன நகரத்திற்குரிய எல்லா தகுதிகளோடும் உள்ளது இந்த புனே.

சென்னை, பெங்களூர் போல் "பணம் இருந்தால் பத்தும் பார்க்கலாம் இங்கே!"

அடுத்து, சாப்பாடு...
மருந்துக்கு கூட நம்மூர் சாப்பாடு கிடைக்கவில்லை. சாம்பார் இட்லி எல்லாம் இப்போ அமிர்தமாய் தெரிகிறது. தூங்கி எழுந்ததும் வடையெய் பண்ணில் வைத்து சாப்பிடு என்கிறார்கள். பிளைட் ஏறும் முன் நம்மூர் சாப்பாட்டு நினைப்பை ஏர்போர்ட் லேயே விட்டுவிட்டு வரவும்.

தமிழ் மொழியை கேட்க எப்போதும் ipod இல் நல்ல தமிழ் பாடல்களை மறக்காமல் கொண்டு வரவும். சான்பிரான்சிஸ்கோ சிட்டியிலாவது நிறைய தமிழ் குரல் கேட்க முடிந்தது ஆனால் இங்கே நானே பேசி நானே கேட்க வேண்டி இருக்கிறது. குழுவாக வருவர்களுக்கு பிரச்சினை இல்லை.

பப்ளிக் டிரான்ஸ்போர்ட் ரொம்பவும் குறைவு. சொந்த வண்டி இல்லாதவர்களுக்கு ஆட்டோவே டிரான்ஸ்போர்ட்.

குறைந்த பஸ் சேவையிலும் ஏறிய பொது கவனித்து....
**நடத்துனர் மொழியும், டிக்கெட்டும் ஹிந்தி மற்றும் மராட்டியிலும் தான் இருக்கும். மொழி பெயர்ப்பவர் இருந்தால் நல்லது
**இன்னும் பழைய முறையிலேயே டிக்கெட்டை ஒரு பேடில் வைத்து கிழித்து கொடுக்கிறார்கள்
**விசிலுக்கு பதில் கயிறில் கட்டப்பட்ட மணி (ஏற்கனவே கேரளாவிலும் அமெரிக்காவிலும் பார்த்தது), ஓட்டுனரை அழைக்கும் நல்ல முறை.
**இறங்கும் இடம் புதிதாக இருந்தாலோ, ஹிந்தி கொஞ்சம் கூட தெரியாமல் இருந்தாலோ துணை இல்லாமல் போக கூடாது
**டிக்கெட் விலை ஏறக்குறைய பெங்களூர் போல உள்ளது
**பஸ் மாடல் இன்னும் 1980 போலவே உள்ளது.

டிராபிக் ரூல் என்பது மற்ற இந்திய நகரங்களை போலவே ஒருவரும் மதிப்பில்லை. முறையற்ற வாகன ஓட்டும் முறையால் தேவையற்ற வாகன நெரிசல் ஒவ்வொரு சிக்னலிலும்...
ஹெல்மெட் கட்டாயம் இன்னும் வரவில்லை. ஹெல்மெட் அணிந்து வருபவர்கள் மிக சிலரே.

கம்பெனி களை பொறுத்தவரை இங்கு மென் பொருள் நிறுவனங்கள் அதிகமாக உள்ளது. அதனாலேயே அதிகமான இளம் ஆண் பெண்களை அதிகமாக பார்க்க முடிகிறது. அனேகமாக உலகின் பெரிய மற்றும் முக்கிய நிறுவனங்களின் கிளை இங்கு உள்ளது.

கடைசியாக...
தனி வீடு முறை இங்கு மிகக் குறைவு. அபார்ட்மென்ட் முறையே இங்கு உள்ளது. அதையும் இங்கே சொசைட்டி என்று சொல்கிறார்கள். வாடகையும் அதிகம்.

மொத்தத்தில் இயற்கை எழில் சூழ்ந்த புனே இன்று மெல்ல மெல்ல செயற்கை கலந்த நவீன கலாசாரத்திற்கு மாறிக்கொண்டு வருகிறது. இதுபோல் மாறிய பெங்களூர் நம் கண் முன்னே. பொறுத்திருந்து பாப்போம், வருங்கால புனே எவ்வாறு இருக்கும் என்று.


சரவணன் த